Friday, December 27, 2019

சுந்தர காண்டம் - 32 - கண்டான் சீதாப்பிராட்டியை (தொடர்ச்சி)

சீதாப்பிராட்டி எப்படியிருக்கிறாள்?

மான் இளம் பேடை அயில் எயிற்றுவெம் புலிக் குழாத்து அகப்பட்டதன்னாள்

இளமையுடைய பெண் மான் கூரிய பற்களைக் கொண்ட புலிக்கூட்டத்தில் சிக்கியது போலிருந்தாள்.


சீதாப்பிராட்டி செய்கைகள் என்னவாயிருந்தன?

பூமியில் விழுதல்; தேம்பி அழுதல்; அதிகமாக உடல் வெப்பம் அடைதல்; அஞ்சுதல்; அழுதல்; வருந்துதல்; இராமபிரானை நினைத்து நினைத்து வணங்குதல்; தளர்ச்சியடைதல்; உடல் நடுக்கம் அடைதல்; துன்பத்தால் சிதைந்து பெருமூச்சு விடுதல்; புலம்புதல் அன்றி வேறு ஏதும் செய்யாதவளாக இருக்கிறாள் சீதாப்பிராட்டி.


சீதாப்பிராட்டியின் துயர் நிலை எவ்வாறிருந்தது?

கண்களில் இடையறாத அருவி போலக் கண்ணீர் வழிந்து ஓடிக் கொண்டிருப்பதால்

'நெடும் இணை கண்கள், நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால் மழைக்கண்'

என்கிறான் கம்பநாடன். மேகம் இருந்தால் தானே மழை வரும், ஆக, கண்களை மேகங்களாய்க் கொள்கிறான்.

அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம்
கரிய காண்டலும்,கண்ணின் நீர் கடல் புகக் கலுழ்வாள்;


கருமை நிறங்கொண்ட - கரிய மேகம் முதல் கண்களில் தீட்டும் மை வரை - எதனைக் கண்டாலும் இராமபிரானின் நினைவிற்கு வந்து, கடலில் புகும்படியான அளவிற்கு கண்ணீர்ப் பெருக்கு ஊற்றெடுக்கிறது.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers