Sunday, September 25, 2005

பீமரதசாந்தி

அதாத: ஸம் ப்ரவக்ஷ்யாமி சாந்திம் பீம ரதா பிதாம்
ஹாயனே ஸப்ததிதமே ம்ருத்யுர் பீம ரதோபவேத்
ஷன் மாஸான் ம்ருத்யு மாப்ணோதி தணஹாநிஸ்ததைவச
புத்ர தாராதி நாசஸ்ச த்ரவ்ய தான்ய பசுக்ஷய ஹ
தத்தோஷ சமநார்த்தாய சாந்திம் குர்யாத் விதானாதஹ
ஜன்ம மாஸே ஜன்மதினே ஜன்மர்§க்ஷவா பலான்விதே
-ஸ்ரீ சௌனக மஹரிஷி

விரிவுரை
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் 70-ம் ஆண்டில் பீமரதம் (மிக பயங்கரமான ரதம்) என்னும் வாஹனத்தில் ஏறி ம்ருத்யு (யமன்) நம்மைத் தீர்க்க (அழிக்க) வருகிறான். அது முடியாவிடில் நமது குழந்தைகளுக்கு மரணம், வ்யாதி, விபத்துக்கள் அல்லது குடும்பத்தில் குழப்பம், சண்டை முதலியவைகளை ஏற்படுத்துகிறான். அதுவும் முடியாவிடில் திருட்டு, தன நாசம், பிராணிகள் நாசம் முதலிய இழப்புகளை ஏற்படுத்துகிறான். இத்தனை இழப்புகளையும் நீக்க வேண்டுமானால் நமது ஜன்ம தினத்தன்று ம்ருத்யுஞ்ஜயனான ஸ்ரீ பரமேச்வரனை "ஸ்துஹி ஸ்ருதம்" என்னும் மந்திரம் கொண்டு வழிபடவேண்டும். மேலும் ப்ரும்மா, விஷ்ணு, துர்க்கை, அஷ்ட திக் பாலகர்கள் முதலிய தெய்வங்களை "பீமரத சாந்தி" என்னும் இம்முறையில் வழிபடுபவர்கள் குடும்பத்துடன் நீண்ட ஆயுள், வியாதியற்ற வாழ்க்கை, குடும்பத்தில் ஒற்றுமை ஐஸ்வர்ய சம்ருத்தி முதலிய §க்ஷமங்களோடு வாழ்ந்திருப்பார்கள்.

விளக்கவுரை
ஸ்ரீ பரமேச்வரனுடைய அனுக்¢ரஹத்தினால் நமது எல்லா பாவங்களும் விலகி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மனஸ் ஸாந்தி முதலிய எல்லா நன்மைகளும் நமக்குக் கிடைக்க ஸ்ரீ ருத்ர ஏகாதசினி என்னும் இந்த ஜப ஹோம வைபவம் உதவுகிறது. 59-ம் வயது முடிவில் "உக்ரரத சாந்தி", 60 வயது முடிவில் "ஷஷ்டியப்த பூர்த்தி", 70 வயது முடிவில் "பீமரத சாந்தி", 80 வயது முடிவில் "சதாபிஷேகம்", 90 வயதில் "விஜயரத சாந்தி", 100 வயதில் "கனகாபிஷேகம்"- பிள்ளைவழிப் பேரனுக்குக் குழந்தை பிறந்த பிறகு "ப்ரபௌத்ர சாந்தி" முதலிய வைபவங்களைச் செய்து மேற்படி காலங்களில் ஏற்படும் வ்யாதி, ம்ருத்யுபயம் முதலியவற்றை நீக்கி ஸகல §க்ஷமங்களையும் அடையும்படி சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

-திரு பி. ஆர். ராஜா வாத்தியார், சென்னை

Saturday, September 24, 2005

பூத்தவளே!

'பூத்தவளே' எனத் தொடங்கும் அபிராமி அந்தாதி, மாத்தவளே என்கிறது அம்பிகையை. மாத்தவளே என்றால் அரிய பெரிய தவம் செய்தவள் என்பது பொருள். தவமே தானாகிய தாய் ஏன் தவம் செய்கிறாள்? சின்னப் பிள்ளைகளூக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைக்க வேண்டும் என்றால் சின்னப் பிள்ளை மாதிரியே நாம் நடந்து கொண்டு புரிய வைத்தால் லகுவில் புரியும். குழந்தைகட்கு 'அ-ஆ' சொல்லும் ஆசிரியை, குழந்தைகளை விடப் பெரிதாக வாயைத் திறந்து கொண்டு, குழந்தைத்தனமான முகத்துடன் 'ஆ' சொன்னால் அப்படியே குழந்தைக்குப் பதிந்து விடும். எவ்வளவுக்கெவ்வளவு சின்னப் பிள்ளைத்தனமாகப் பெரியவர்கள் சேட்டை செய்கிறார்களோ, அவ்வளக்கவ்வளவு விரைவாகக் குழந்தைகள் மனத்தில் அது பதியும்.'
நமக்கெல்லாம் தவத்தைச் சொல்லிக் கொடுக்க வந்த அம்பாள் மனுஷத்தனமாகத் தவமிருந்தால் தானே தவம் நம் தலையில் ஏறும். அப்படித் தவமிருந்த விஷயமே ஒரு பெரிய விழாவாகத் தமிழ் நாட்டில் நடக்கிறது ஒரு ஊரில்..பத்து நாள் திருவிழா. ஆடித் தபசு என்று சங்கரன்கோவிலில் நடைபெறும் பெருவிழா.

- ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் - திரு சுகி சிவம், வானதி பதிப்பகம்.

Friday, September 23, 2005

பஜனின் உள்ளர்த்தம்

பஜனின் உள்ளர்த்தத்தை பாபாவே ஒரு முறை விளக்கியிருக்கிறார்.

'ஒரு மரத்தடியில் நீங்கள் எல்லாம் கூடி, உரத்த குரலில் கத்தினால், மரக்கிளைகளில் உட்கார்ந்திருக்கும் எல்லாப் பறவைகளும் பறந்தோடிவிடும். மனித வாழ்க்கை என்பதும் ஒரு மரம்தான். அதன்மேல் பலவகைப் பறவைகள் உட்கார்ந்து நம்மைத் திசை திருப்பும் ஒலிகளை எழுப்புகின்றன. அத்தகைய பறவைகள் எவை? காமம், குரோதம், மோகம், மதம், மாச்சர்யம் இவையெல்லாம் சேர்ந்து எழுப்பும் கலவையான ஒலியில் உங்களது மன அமைதியும் சமநிலையும் கெடுகின்றன. உரத்த குரலில் ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா என்று பாடினால் அத்தகைய தீய பறவைகள் பறந்துவிடும். உங்கள் மனம் தூய்மையாகும். இதயம் அமைதியடையும்'

-குருவே சரணம், பிரபுநந்த கிரிதர்

Saturday, September 03, 2005

நித்யப் பிரளயம்

வாழ்நாள் முழுவதும் எதன் நினைப்பு ஒருத்தன் மனஸில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணை வருமா என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீ¨க்ஷ வைத்துக்கொள்ளலாம். அதாவது:

அன்றன்றைக்கும் நாம் தூங்குகிறோம் அல்லவா? இதையும் ஒரு சாவு மாதிரிதான் என்று சாஸ்திரங்கள் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டை போல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம்? இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. 'நித்யப் பிரளயம்' என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படித் தினமும் நாம் 'சாகிற' போது பகவானையே ஸ்மரித்துக்கொண்டு 'சாக' முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம். தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்புக்கிடையே தூக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும். வேற நினைப்பு வரக்கூடாது. சொல்லும்போது ஸ¤லபமாக இருக்கும். ஆனால் பண்ணிப்பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும். காமாக்ஷ¢யோ, நடராஜாவோ, தக்ஷ¢ணாமூர்த்தியோ, வேங்கடரமண ஸ்வாமியோ, முருகனோ - எந்த தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம், அந்த இஷ்டதெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு ஸமானமாக நமக்கு சாந்தியும் ஸந்துஷ்டியும் தருகிற ஒரு குரு, மஹானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால், 'இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது? மனஸ¤க்கு ஆறுதலாகவும், ரம்யமாகவும் இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன ச்ரமம்?' என்றுதான் தோன்றும். ஆனால் எதனாலோ, சிறிது நேரமானால் இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு மனஸ் வேறெங்கேயாவதுதான் போய் விழும். அப்படியே கண்ணைக் கசக்கித் தூக்கத்தில் கொண்டு போய் விட்டு விடும். இப்படி ஏமாறாமல் பழகிக்கொண்டால் சாகிற ஸமயத்திலும் பகவானை விடாமல் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம். எல்லாம் அப்யாஸத்தில், விடாமுயற்சியில்தான் இருக்கிறது. நம்முடைய ச்ரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கை கொடுப்பார்.
-காஞ்சி மஹா பெரியவர்

முந்தைய பதிவுகள்

Followers