Saturday, April 14, 2012

பாலபிஷேகம்!

ஒன்று கவனிக்க வேண்டும். 


சந்தனாபிஷேகம்என்கிற மாதிரியே பல பேர்பாலாபிஷேகம்என்கிறார்கள்.  அது தப்பு.  பாலபிஷேகம்என்றுவைக் குறிலாகவே சொல்ல வேண்டும்.  சந்தன’, ‘க்ஷீரஎன்ற வார்த்தைகள்காரத்தில் முடிவதால் அவற்றோடுஅபிஷேகம்என்றுகாரத்தில் ஆரம்பிக்கும் வார்த்தையைச் சேர்க்கும்போது இரண்டு குறில்காரங்கள் சேர்ந்து ஒரு நெடில்காராமாகி, ‘சந்தனாபிஷேகம்’, ‘க்ஷீராபிஷேகம்என்ற கூட்டு வார்த்தைகள் உண்டாகின்றன.



பால்என்கிற வார்த்தைகாரத்தில் முடியாமல்ல்என்ற ஒற்றெழுத்துடன் முடிகிறது.  அதோடுஅபிஷேகம்சேரும்போது ல் + என்பது (குறிலான) ‘ஆகத்தான் வருமாதலால்பாலபிஷேகம்என்றுதான் ஆகும்.  தேன் + அபிஷேகமும் இப்படியேதான் – ‘தேனபிஷேகம்ஆகுமே தவிரதேனாபிஷேகம்அல்ல.



இதே மாதிரிதான்ஷடாக்ஷரம்என்பதும் தப்பு.  ஷடக்ஷரம்தான்.  பஞ்ச + அக்ஷரம்பஞ்சாக்ஷரம்; அக்ஷ்ட + அக்ஷரம்அக்ஷ்டாக்ஷரம் என்கிற மாதிரி இல்லாமல் ஷட் + அக்ஷரம் என்றே இருப்பதால் ஷடக்ஷரம் என்றே ஆகும்.



-காஞ்சிப் பெரியவர்

Saturday, March 31, 2012

இராம நவமி!

இராம நவமியன்று பிறந்தவர் என் தந்தை. 

தன் பிறந்த நாளை இராமனின் நாளாகவே கொண்டாடி மகிழ்ந்து திளைத்தவர்.  ராம கதையைச் சொற்பொழிவாற்றி, பல உள்ளங்களைக் குளிர்வித்தவர்.  வால்மீகி / கம்பரில் திளைத்து, திளைத்து மெருகேற்றிக்கொண்டவர்.  சுந்தர காண்டம் ஸப்த ஸர்க்க (ஏழு அத்தியாயங்கள்) பாராயணத்தைத் தினமும் செய்து, ஆன்ம பலத்தைப் பெருக்கி, குடும்பத்தை ஏற்றம் பெறச் செய்தவர்.  குருவாய் இருந்து, ராம நவமியன்று எனக்கு சுந்தர காண்டம் எடுத்துக்கொடுத்து, வாழ்க்கையின் சவால்களைத் தைரியமாகவும், ஆன்மீகமாயும் எதிர்கொள்ளச் செய்தவர்.

அவரைப் பற்றிப் பேசுவதை விட இந்நாளில் இராமனைப் பற்றிச் சிந்திப்பதையே விரும்பியிருப்பார் என்பதால் ‘உயிர் எழுத்து’-ல் அமைந்த, ராமனின் சரிதத்தைச் சொல்லும் பாடலை (அவர் எழுதிய குறிப்புகளிலிருந்து) என் தந்தையின் தாள்களில் வணக்கமாகச் சமர்ப்பிக்கின்றேன்.

அன்றொரு நாள் ராமன் வனம் சென்றதுவும்
ஆங்கவன் பொன்மானைக் கொன்றதுவும்
இலக்குமி வடிவாம் சீதை மறைந்ததுவும்
ஈடிலா ஜடாயு உயிர் பிரிந்ததுவும்
உம்பியொருவனை ராமன் பெற்றதுவும்
ஊறுசெய் வாலிதனை அழித்ததுவும்
எம்பிரார்க்காய் அனுமன் கடல் கடந்ததுவும்
ஏற்றமிகு லங்கை தீப்பட்டதுவும்
ஐயமின்றி அரக்கர் படை அழிந்ததுவும்
ஒப்பாரின்றி இப்பாரை ஆண்டதுவும்
ஓதுதற்கு ஏற்ற நூல் ஆனதுவும்
ஔடதம் போல் உள்ளம் உவப்பதுவும்
அஃதன்றே ஒரு பாடல் ராமகதை…!

‘அப்பா! இந்த உலகத்தை ஆனந்தமாகவும், அமைதியாகவும் வைத்திருக்க ஆசி தாருங்கள்’ என்றே அவர் 75வது பிறந்த நாளன்று வேண்டிக்கொள்ளத் தோன்றுகிறது.

முந்தைய பதிவுகள்

Followers