Tuesday, December 17, 2019

சுந்தர காண்டம் - 23 - நம் துயர் நீக்கும் அனுமன் துயரம் (தொடர்ச்சி)

Soliloquy (/səˈliləkwē/) என்கிற ஆங்கில வார்த்தையின் முழுமையான உதாரணத்தை அனுமனின் நிலை/பேச்சில் காணலாம். சுற்றுப் புறத்தை மறந்து தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல் என்று கொள்ளலாம் (ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோ-ஜுலியட் நாடகத்தில், ஜுலியட்-ன் மன ஓட்டங்கள்-ஐப் பொருத்தலாம் என்று இணையம் கூறுகிறது).

சீதாப் பிராட்டி இராவணேசுவரனால் கொல்லப்பட்டிருப்பாள்;

கோரமான ராக்ஷஸிகளைக் காணச்சகியாது உயிரை விட்டிருப்பாள்;

எதிரிகளின் பலத்தை அறியாமலும், சீதாப்பிராட்டியைக் காணாமலும் சுக்ரீவ மகாராஜாவிடம் போகும் துணிவில்லை;

'இவ்வாறு எண்ணுவதெல்லாம் சரியல்ல, மனந்தளராமை மிக முக்கியம்' என உணர்ந்து, உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் முயல்கிறான் அனுமன்.

இராவணேசுவரனுடைய அந்தப்புரத்திலும், இலங்காபுரியிலும் அனுமன் போய்ப் பார்க்காத நான்கு அங்குல நிலம் கூட இல்லை என்கிறார் வான்மீகி முனிவர்.

சதுர அங்குல மாத்ரோSபி
நாவகாஸ: ந வித்யதே|
ராவணாந்த:புரே தஸ்மின் யம்
கபிர்ந ஜகாம ஸ: ||

எல்லா வகையான மகளிரையும் கண்ட அனுமன், மெல்லிய இடை கொண்டவளான சீதாப் பிராட்டியைக் காணாது, வானரத் தலைவர்களுடைய பெருமுயற்சியும், தான் கடல் தாண்டி வந்தது வீணானதாயும் நினைத்து அனுமன் பெருங்கவலை கொள்கிறான்.

இப்படிப்பட்ட சோகத்தில் ஆழ்ந்த மனதுடன் மீண்டும் ஆலோசிக்கத் துவங்குகிறான் அனுமன்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers