'இத்தகைய மனைவியைப் பிரிந்து உயிர் வாழும் இராமபிரான் செயற்கரிய செய்லை ஆற்றுகிறானாம்! சந்தேகமில்லை' என்று கூறுவது யார்? திருமணம் வேண்டாத, என்றும் பிரம்மச்சாரியான அனுமன்.
அண்ணனைக் காட்டுக்குப் போ என்று சொன்னவன் தந்தையென்றாலும் அவரை விட மாட்டேன் என்று இலக்குவன் சினம் கொண்ட போது, இராமபிரான் அன்புடன், 'நம் சிற்றன்னை அறிவின் மீது தவறில்லை; நம் தம்பி பரதன் மீது தவறில்லை; நம் தந்தை மீது தவறில்லை; தம்பீ, இது விதியின் தவறு' என்று சமாதானம் செய்தது நினைவிருக்கலாம்.
வான்மீகி முனிவரும் இங்கு விதியின் வலிமையைக் கொணர்கிறார்.
'சீதாப்பிராட்டிக்கு ஏன் இப்படி நேர வேண்டும்? இலக்குவனின் மதிப்பிற்குரியவர்; அவன் தமையனின் அன்பைப் பெற்றவளான இவரே இத்துணை துன்பப்பட வேண்டுமென்றால் 'விதி வலிமையானது' என்று கொள்ளத்தானே வேண்டும்?' என்று உருகுகிறான் அனுமன்.
யதி ஸீதாபி துக்கார்த்தா காலோ ஹி துரதிக்ரம:
நெருப்பில் குளிப்பார்; புலன்களை அடக்குவார்; உண்ணுவதை நீக்கி நோன்பிருக்கும் முனிவர்கள் எவரும் கற்புநிலை தவறாத மகளிர்க்கு ஈடாகார் என்று உவகை கொள்கிறான் அனுமன்.
வெங்கனல் மூழ்கியும், புனலுள் மேவியும்,
நுங்குவ, அருந்துவ நீக்கி, நோற்பவர்
எங்குளர்? - குலத்தில் வந்(து) இல்லின் மாண்புடை
நங்கையர் மனத்தவம் நவிலற் பாலதோ?
ஆம், சீதாப்பிராட்டியின் தோற்றத்தால் பிறப்பும், பெண்மையும் உயர்ந்து விட்டன.
No comments:
Post a Comment