Saturday, January 11, 2020

சுந்தர காண்டம் - 47 - அறிவு காட்டி இடிக்குநர் இல்லை

இராவணேசுவரனை அம்பினால் வீழ்த்துவது எளிதாயிற்றே! அவனுக்குத்தான் பத்து தலைகள் இருக்கின்றனவே!
வித்தக வில்லினாற்குத் திருவிளையாடற் கேற்ற
சித்திர இலக்கமாகும்
பறவையை வென்றேன் என்று சாகச வார்த்தையை எதிர்கொள்ளவே, 'சிவபெருமான் வாள் உன்னிடம் இல்லாதிருந்தால் சடாயு உன் இறுதிச் சடங்கைச் செவ்வனே செய்திருப்பார்.'

என்கிறார் சீதாப்பிராட்டி.

எல்லோரையும் கடிக்கும் தன்மையுடைய நல்ல பாம்பு, மந்திரத்திற்குக் கட்டுப்படும் (மகுடி). ஆயின், நீ (மந்திரி) ஆலோசனை கேட்காமல் இப்படிக் களித்துக் கொண்டிருக்கிறாயே? இங்கு உன்னை இடித்துக் காட்டும் நல்லவரே இல்லையா?

உன்னைச் சுற்றியுள்ளவர்கள், நீ எண்ணுவதைத் தாமும் எண்ணி, உன்னை படுகுழியில் தள்ளுகின்றனர். அழிவு ஒன்றுதான் உனக்கு முடிவு.

எனக் அருளும் சீதாப்பிராட்டியின் அரசியல் அறிவை மெச்சுவதா? இல்லை, துணிவை மெச்சுவதா?
....அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை, உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை
முடிக்குநர்
அசோகவனத்தில் சிறை, அரக்கியர் சூழ் உலகு, எதுவும் செய்ய இயலாத பேதை என நினைத்திருந்த சீதாப்பிராட்டி, வலிமை மிகுந்த இராவணேசுவரனைச் சட்டென அவமதித்து விட்டார் அவனது மகளிர்கள் முன்.

இராவணேசுவரனுக்குச் சினம் எழுகிறது.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers