சினம் பொங்கி வந்தாலும் இராவணேசுவரன் சொல்வது என்ன?
"என் சினத்தை அடக்குவது உன் மேலுள்ள காதலே; சமாதானப்படுத்திப் பேசினால்
பெண்கள் வசமாவார்கள் என்பது உலக இயற்கை; ஆயின், நீ என்னைப் புறக்கணித்து
விட்டாய்."
"நீ சொன்ன ஒவ்வொரு சொல்லுக்கும் கொலையே தக்க தண்டனை; ஆனால், கொல்லாமல் விடுகிறேன்; ஏனெனில், நீ மிகவும் அழகாயிருக்கிறாய்!" (அசடு வழியும் காரணமாயிருக்கிறது!).
"எதற்கும் இரண்டு மாதங்கள் தருகிறேன்; அதன் பின் எனக்கு இணங்காமற் போனால் உன்னை வெட்டிச் சமைத்து விடுவார்கள்." (உயிர் மேல் ஆசையிருந்தால் படுக்கையறை; மானம் மேல் ஆசையிருந்தால் சமையலறை, எது வேண்டும்?).
சீதாப்பிராட்டி நடுங்குவதைக் கண்டு மனமிரங்கி, சுற்றியுள்ள தேவப் பெண்டிர் "பயம் வேண்டாம்" என்று சமிக்ஞை செய்கிறார்கள்.
பெண்களுக்கே உரித்தான ஜாக்கிரதை உணர்வு மற்றும் அறிவு சீதாப்பிராடிக்குத் துணிச்சலைக் கொடுக்கிறது.
"உன் குரூரமான கண்கள் இரண்டும் தெறித்து விழாது இருக்கின்றனவே என்னைத் தீய நோக்கோடு பார்த்த பின்பும்?" (துடுக்குடன் பேசுகிறார்).
"இராமபிரானின் அனுமதியில்லை என்பதாலேயே உன்னை என் தவ வலிமையால் அழிக்க வில்லை." (உறுமுகிறார்).
இனி பேசிப் பயனில்லை என்பதை உணர்கிறான் இராவணேசுவரன்.
No comments:
Post a Comment