Friday, January 10, 2020

சுந்தர காண்டம் - 46 - துரும்பினும் இளையோன்!

இவற்றைச் செவியுற்ற சீதாப்பிராட்டி அழுது நடுங்குகிறார். ஆயினும், தன் பிரியமானவரை, இராமபிரானை நினைத்தவுடன் துணிவு வந்து விடுகிறது.

துரும்பைக் கிள்ளி அவனுக்கும் தனக்கும் இடையில் இட்டுப் பேசத் துவங்குகிறார்.
த்ருணமந்த்ரத: க்ருத்வா ப்ரத்யுவாச ஸுசிஸ்மிதா||

தன் தகுதிக்குக் கீழானவர்களுடனும், பேசக்கூடாதவர்களுடன் பேசும்போதும், கையாளும் பண்டைய வழக்கம்.

பாவம் செய்தவன் நற்கதியை அடைய முடியுமா?

தருமத்தை நினைத்துப் பார். நான் பிறன் மனைவி. பதிவிரதை. உனக்கு ஏற்றவளல்ல.

எப்படி உன் மனைவிகள் உன்னால் காப்பாற்றப்படுகிறார்களோ, அப்படியே பிறர் மனைவியும் காப்பாற்றப்படத்தக்கவர்கள்.

இங்கு நல்லவர்கள் இல்லையா?

அல்லது அவர்கள் சொல்லியும் கேட்காது உன் புத்தி இப்படி விபரீதமாகச் செல்லுகிறதா? (விஷமக்கார மகனைக் கண்டிக்கும் அன்னையைப் போல)

செல்வத்தைக் காட்டி என்னை மயக்க முடியாது. சூரியனுக்கு ஒளியைப் போல இராமபிரானுக்கு நான்; அவரையன்றி வேறு ஒருவரை என் உள்ளம் நாடுமா?

சொல்வதைக் கேள்; ராவணா! என்னை இராமபிரானிடம் கொண்டு போய் விட்டுவிடு; அவரிடம் நட்பு கொள்; உயிர் தப்புவாய். இல்லையேல் சரமாரியில் விழும் அவரது அம்புகள் இந்நகரில் வந்து பாயும். (மிரட்டுகிறார்)

நீ ஒரு கோழை/பேடி/வீரம் இல்லாதவன்; இராம-இலக்குவர் இல்லாத சமயத்தில் முனி வேடம் பூண்டு என்னை அபகரித்தாயே? இது வீரத்தில் சேர்த்தியோ? (இடித்துக் காட்டுகிறார்).

No comments:

முந்தைய பதிவுகள்

Followers