Wednesday, November 27, 2019

சுந்தர காண்டம் - 1 - சோகம் நீக்க வல்லது

வான்மீகி இராமாயணத்தில் பால, அயோத்திய, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்தர என ஏழு காண்டங்கள் உண்டு.

நடுவில் அமைந்திருக்கும் சுந்தர காண்டம் புனிதமானது என்று எல்லோராலும் போற்றப்படுகிறது. ஏன்?

1. ஸேநா நாயகன் அங்கதன், வழி நடத்துபவன் ஜாம்பவான், தெற்கே தேடும் வானரக் கூட்டத்தின் - கடலைத் தாண்டி சீதாப் பிராட்டியைக் காண முடியுமா - சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

2. கடல் தாண்டி வந்தாலும், லங்கா தேவதையை வென்றாலும், லங்கா நகரம் முழுவதும் சுற்றி வந்தாலும், சீதாப் பிராட்டியைக் காண இயலாது பிதற்றும் அனுமனின் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

3. தன் நாயகனை விட்டுப் பிரிந்து, வருவரா, தன்னை மீட்பாரா, மீட்கும் வரை உயிர் மிஞ்சுமா, இதுதான் வாழ்வா, இப்படி வாழ்வது தேவைதானா என மீளாத் துயரில் ஆழ்ந்து, தற்கொலை எண்ணம் வரை சென்ற சீதாப் பிராட்டியின் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

4. ராஜ்யத்தைப் பெற உதவி செய்த நண்பன் இராமபிரானுக்குக் கைம்மாறு ஏதும் இதுவரை செய்ய இயலாமல் போனதே என்று பரிதவிக்கும் சுக்ரீவனின் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

5. 'கண்டேன் சீதையை!' எனும் இரண்டு வார்த்தைகளில் இராமபிரானின் அளப்பரியச் சோகத்தை நீங்கச் செய்யும் காண்டம்.

உங்களைச் சோகம் பற்றிக் கொள்ளும் தருணங்களில் 'சுந்தர காண்டம்' போதும். வாழ்வின் அருமையையும், பொறுமையின் அவசியத்தையும் மிக அழகாய்க் கற்றுத் தரும்.

உலக வாழ்விலிருந்து உய்வு அடைய, இராமபிரான் - சீதாப் பிராட்டி அருள் கிட்ட, அனுமனின் ஆசிகள் பெற, சுந்தர காண்டம் நிச்சயம் உதவும்.

No comments:

முந்தைய பதிவுகள்

Followers