Friday, September 23, 2005

பஜனின் உள்ளர்த்தம்

பஜனின் உள்ளர்த்தத்தை பாபாவே ஒரு முறை விளக்கியிருக்கிறார்.

'ஒரு மரத்தடியில் நீங்கள் எல்லாம் கூடி, உரத்த குரலில் கத்தினால், மரக்கிளைகளில் உட்கார்ந்திருக்கும் எல்லாப் பறவைகளும் பறந்தோடிவிடும். மனித வாழ்க்கை என்பதும் ஒரு மரம்தான். அதன்மேல் பலவகைப் பறவைகள் உட்கார்ந்து நம்மைத் திசை திருப்பும் ஒலிகளை எழுப்புகின்றன. அத்தகைய பறவைகள் எவை? காமம், குரோதம், மோகம், மதம், மாச்சர்யம் இவையெல்லாம் சேர்ந்து எழுப்பும் கலவையான ஒலியில் உங்களது மன அமைதியும் சமநிலையும் கெடுகின்றன. உரத்த குரலில் ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா என்று பாடினால் அத்தகைய தீய பறவைகள் பறந்துவிடும். உங்கள் மனம் தூய்மையாகும். இதயம் அமைதியடையும்'

-குருவே சரணம், பிரபுநந்த கிரிதர்

1 comment:

Gnana Kirukan said...

arumaiyana vilakam palli! en iraivan baba-vin arul-urai arumai :)

முந்தைய பதிவுகள்

Followers