Tuesday, August 02, 2005

லுலு..லுலு

பைத்தியக்காரர்கள் உள்ள ஒரு புகலிடத்திற்கு ஒரு பார்வையாளர் வந்தார்; அங்கிருந்த பைத்தியங்களில் ஒருவர், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஆடிக்கொண்டே ஒரு மென்மையான, திருப்தியான குரலில் "லுலு..லுலு" என்று திரும்பத் திரும்பச் சொல்கிறதை, அந்தப் பார்வையாளர் பார்த்தார். "இந்த மனிதனுக்கு என்ன பிரச்னை?" என்று அவர் வைத்தியரிடம் கேட்டார். "லுலு என்கிற பெண் அவரை ஏமாற்றிவிட்டாள்" என்று வைத்தியர் பதில் சொன்னார். அவர்கள் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வருகையில், பஞ்சு நிரம்பிய பல பைகள் பொதிந்துள்ள சுவர்களை உடைய ஒரு அறைக்கு வந்தனர்; அங்கிருந்தவர், சுவற்றில் தனது தலையைத் திரும்பத் திரும்ப மோதிக்கொண்டு "லுலு" என்று முனகிக்கொண்டு இருந்தார்.

"இந்த மனிதரின் பிரச்சினையும் லுலுதானா?" என்று கேட்டார் பார்வையாளர்.
"ஆமாம்" என்றார் வைத்தியர், "இவரைத்தான் லுலு, கடைசியாகத் திருமணம் செய்துகொண்டாள்"

வாழ்க்கையில் இரண்டு இன்னல்கள் மட்டுமே இருக்கின்றன.
நீங்கள் ஆசைப்படுவதை அடையாமல் இருக்கிறதும்....
நீங்கள் ஆசைப்படுவதை அடைகிறதும்!

-அந்தோணி டி மெல்லோ அவர்கள் எழுதிய தவளையின் பிரார்த்தனை (பாகம் 2) , கண்ணதாசன் பதிப்பகம்

2 comments:

Gnana Kirukan said...

Hi,
I am very happy to see posts like this..please visit my blog: http://naan-yaar.blogspot.com

Can you put a "blogroll me" thing in your site - so that it wuld be easy for people to blogroll you..I want to blogroll you in my blog.

TJ said...

Road Not taken maadhiri!
idhai seidhal, adhai seidhiriukalame endru thondrum, adhai seidhal, idhai seidhirukalme endru thondrum. ;)

முந்தைய பதிவுகள்

Followers