Thursday, August 04, 2005

வரி வசூல் பற்றி...

வண்டானது எப்படிப் புஷ்பத்துக்கு வலி தெரியாமல் தேனை எடுத்துக் கொள்கிறதோ, அப்படித்தான் ராஜா பிரஜைகளுக்குக் கொஞ்சங்கூட சிரமம் தெரியாமல், அவர்களூடைய மலர்ச்சி குன்றாமலே வரி வசூலித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

இதை இன்னொரு உவமையால் இன்னும் அழகுபடுத்திச் சொல்லியிருக்கிறான் உவமைக்கே பெயர் பெற்ற காளிதாஸன்.

'ஸ¤ர்யன் எப்படி முதலில் பூமியிலிருந்து ஜலத்தை உறிஞ்சிக் கொண்டு அப்புறம் அதை பூமிக்கே மழையாகப் பொழிகிறானோ, அப்படி திலீபன் பிரஜைகளிடமிருந்து வசூலித்ததைப் பிறகு அவர்களுடைய நலனுக்கேயான காரியங்களில் செலவிட்டான்' என்கிறான்.
-காஞ்சி மஹா பெரியவர்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers